நாகூரில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. நாகூர் ரயிலடித் தெருவில் உள்ள மைமூன் செரீபா, பாத்திமா ஆகியோரின் வீடுகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் மைமூன் செரீபா வீட்டிலிருந்த நகை, பணம் உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாயின இதன் மதிப்பு 3 லட்சம் இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நாகை தொழிலதிபர் ஒருவர் பாதிக்கப்பட்ட மைமூன் செரீபாவிற்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் 5 ஆயிரம் வழங்கினார்.
நாகூரிலிருந்து... நமது செய்தியாளர்.

No comments:
Post a Comment