தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை என்று புதிய தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் அலங்கரித்த இடத்தை எனக்கு அளித்து, கட்சித் தலைமை வாய்ப்பளித்துள்ளது. இதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அனைத்துத் தலைவர்களையும் அரவணைத்துச் செல்வேன் என்ற அவர், "காங்கிரஸ் கட்சிக்கு நான் புதியவன் இல்லை. கட்சியில் கோஷ்டி அரசியலுக்கு இடமில்லை. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை அரவணைத்துச் செல்வேன்,"என்று கூறினார்.


No comments:
Post a Comment